2016 ம் ஆண்டு உயர்திரு.M.S.M.B. கூடலிங்கம் M.A., அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார். 2016 – 2017ம் கல்வியாண்டில் தலைமையாசிரியை திருமதி.S. ராஜசௌந்தரி M.Sc.,M.Ed., M.Phil., அவர்கள் பணிநிறைவு பெற்றார். 2017 அன்று திருமதி. S. சாந்தி M.Sc.,M.Ed., M.Phil., அவர்கள் தலைமையாசிரியையாகப் பொறுப்பேற்றார். 03.08.2017 அன்று ” ATAL TINKERING LAB “ அன்று தொடங்கப்பட்டது. 12-08-2017 அன்று மேனேஜிங் போர்டு நிர்வாகத்தினரின் சார்பில் 34ஆண்டுகள் சீரிய முறையில் பணியாற்றி பணிநிறைவு பெற்ற திருமதி. S. ராஜசௌந்தரி M.Sc.,M.Ed., M.Phil., அவர்களுக்குப் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. 27.8.2018 அன்று பலசரக்குக்கடை மகமை வளாகத்தின் இரண்டாம் மாடியின் இடது புறத்தில் மூன்று வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டது. MESS HALL கட்டப்பட்டது.
2018 ம் ஆண்டு உயர்திரு. Rm.P.T.R. தனிக்கொடி B.Sc., அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
S.S.L.C , H.S.C பொதுத் தேர்வுகளில் மதிப்பெண் முதன்மை, பாடவாரியாக முதன்மை மற்றும் H.S.C தேர்வில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் முதன்மை பெற்ற மாணவியருக்கு தங்க மெடல்கள் கொடுத்து வர Endowment ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளியில் ஏழை மாணவிகளுக்கு சீருடை, புத்தகங்கள், தேர்வுக் கட்டணங்கள் அளிக்க Endowment ஏற்படுத்தப்பட்டுள்ளன.
“க்ஷத்திரிய பெண்கள் பள்ளி பெற்றோர் – ஆசிரியர் சங்கம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மாணவியர் மலர் வெளியிடப்படுகிறது.
நிர்வாகத்தினரின் ஊக்கத்தாலும், ஆர்வத்தாலும் பள்ளி சகலவசதிகளோடு விளங்குகிறது. தலைமையாசிரியை அவர்களின் சீரிய முயற்சியாலும், ஆசிரியர்களின் அயராத உழைப்பாலும், மாணவியர்கள் பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பள்ளியை விருதுநகர் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாகத் திகழச்செய்கின்றனர். மேலும் கல்வி, விளையாட்டு, கலை போன்ற இணைச் செயல்பாடுகளிலும் முதன்மை பெற்றுத் திகழ்கின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவியர்கள் மாநிலம் போற்றும் மாணிக்கங்களாகத் திகழ்கின்றனர்.
2021 ஆம் ஆண்டு உயர்திரு.Rm.P.T.பொன்ராஜன் M.B.A., அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றார். 5.9.2023 ஆம் ஆண்டு திருமதி.S. சாந்தி M.Sc., M.Ed.,M.Phil., அவர்கள் நல்லாசிரியர் விருது பெற்றார்.2023 ஆம் ஆண்டு மேனேஜிங் போர்டு நிர்வாகத்தினரின் சார்பில் அன்னாருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
2023 ஆம் ஆண்டு உயர்திரு. T.S.S.சபரிமுத்து B.Sc., அவர்கள் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.2023-2024 ஆம் கல்வியாண்டில் தலைமையாசிரியை திருமதி.S.சாந்தி M.Sc.,M.Ed.,M.Phil., அவர்கள் பணிநிறைவு பெற்றார்.2024ஆம் ஆண்டு திருமதி.M.அமுதா M.A.,B.Ed., அவர்கள் தலைமையாசிரியையாகப் பொறுப்பேற்றார்.